மரபுப் பிழைகள் மற்றும் வழுஉச் சொற்களை நீக்குதல் வினா விடைகள்

1. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
A. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்
B. பட்டனம் என்பது காவிரிப் பூம்பட்டணம்
C. பட்டிணம் என்பது காவிரிப் பூம்பட்டிணம்
D. பட்டனம் என்பது காவரிப் பூம்பட்டனம்
Answer
A. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினம்
2. மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A. அண்ணாக் கயிறு விக்கிறான்
B. அரைஞான் கயிறு விக்கிறான்
C. அரைஞாண் கயிறு விற்கிறான்
D. அண்ணாக் கயிறு விற்கிறான்
Answer
C. அரைஞாண் கயிறு விற்கிறான்
3. மரபுப் பிழையற்ற வாக்கியத்தைக் குறிப்பிடுக
A. அவரக்கா கூட்டம் கூட்டமாய்க் காய்க்கும்
B. அவரக்காய் கொத்துக் கொத்தாய் காய்க்கும்
C. அவரைக்காய் கூட்டம் கூட்டமாய்க் காய்க்கும்
D. அவரைக்காய் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்
Answer
D. அவரைக்காய் கொத்துக் கொத்தாய்க் காய்க்கும்
4. பிழையற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க
A. குளகரையில் கொக்கு பறந்து சென்றது
B. குளக்கரையில் கொக்குப் பறந்துச் சென்றது
C. குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது
D. குளக்கரையில் கொக்கு பறந்துச் சென்றது
Answer
C. குளக்கரையில் கொக்கு பறந்து சென்றது
5. மரபு வழூஉச்சொல் திருத்தம் பெற்ற வாக்கியத்தைத் தேர்க
A. மாதவன் புழக்கடைப் பக்கம் சென்று இடது பக்கம் திரும்பினான்
B. மாதவன் புழைக்கடைப் பக்கம் சென்று இடப்பக்கம் திரும்பினான்
C. மாதவன் புறக்கடைப்பக்கம் சென்று இடப்பக்கம் திரும்பினான்
D. மாதவன் புறக்கடைப்பக்கம் சென்று இடதுபக்கம் திரும்பினான்
Answer
C. மாதவன் புறக்கடைப்பக்கம் சென்று இடப்பக்கம் திரும்பினான்
6. வழூஉச் சொற்களை நீக்குக
A. தென்னை இலையால் கீத்து பின்னினான்
B. தென்ன ஓலையால் கீத்து பின்னினான்
C. தென்னை இலையால் கீற்று முடைந்தான்
D. தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
Answer
D. தென்னை ஓலையால் கீற்று முடைந்தான்
7. மரபுப் பிழையை நீக்குக
A. குயில் கூவக் காகம் கரைந்தது
B. குயில் கத்தக் காகம் கூவியது
C. குயில் கூவக் காகம் கத்தியது
D. குயில் கத்தக் காகம் காகா என்றது
Answer
A. குயில் கூவக் காகம் கரைந்தது
8. சரியான கூற்று எது?
A. கிணரின் சுவரில் ஓர் பாம்பு உள்ளது.
B. கிணறின் சுவற்றில் ஒரு பாம்பு உள்ளது
C. கிணற்றின் சுவரில் ஓர் பாம்பு உள்ளது
D. கிணற்றின் சுவரில் உரு பாம்பு உள்ளது
Answer
C. கிணற்றின் சுவரில் ஓர் பாம்பு உள்ளது
9. சரியானது எது?
A. யானைக் கொட்டில் குதிரைக் கூடம்
B. யானைத் தொழுவம் குதிரைக் கூடம்
C. யானைக் கூடம் குதிரைத் தொழுவம்
D. யானைக் கூடம் குதிரைக் கொட்டில்
Answer
D. யானைக் கூடம் குதிரைக் கொட்டில்
10. பிழையற்ற வாக்கியம் எது?
A. வருவதும் போவதும் கிடையா
B. வருவதும் போவதும் கிடையாது
C. வருவதும் போவதும் கிடையது
D. வருவதும் போவதும் கிடையாயது
Answer
A. வருவதும் போவதும் கிடையா
இந்தியா
பொருளாதாரம்
பொது அறிவியல்
புவியியல்